Monday 17 March, 2008

வெங்காயம்

ன்றாகப் பழகியதொரு பாதை
எனைக் கடந்துகொண்டிருக்கும் பொழுது
திருப்புமுனை ஒன்றில் உனைச் சந்தித்தேன்
அதுவரை
கனவுகளால் செப்பமிடப்பட்ட அந்தப் பாதை முழுக்கவும்
நானே நிரம்பியிருப்பதாய் உணர்ந்திருந்தேன்
இலவு காத்த கிளி போல அல்லாமல்
பறந்து போன பஞ்சாகியது
சூழல் புதிதானது
நீயும் புதிதானாய்
பிறிதொரு நாள்
உன்னுள் நானும் என்னுள் நீயுமாய்
உறைந்து கிடக்கிற பொழுது
நன்றியுள்ள ஜீவனுக்குச் சிறுவயதில்
நான் வீசிய கல் போல
எனக்கே திரும்பியது
உன் மறுமுனையில் நான் என்றானபிறகு
நமக்கிடையில் யாரோ
நடந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள்
இந்த முறை
இலவு காத்த கிளியோ
விலை கூறப் போகிற வெங்காயமோ?

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in