நன்றாகப் பழகியதொரு பாதை
எனைக் கடந்துகொண்டிருக்கும் பொழுது
திருப்புமுனை ஒன்றில் உனைச் சந்தித்தேன்
அதுவரை
கனவுகளால் செப்பமிடப்பட்ட அந்தப் பாதை முழுக்கவும்
நானே நிரம்பியிருப்பதாய் உணர்ந்திருந்தேன்
இலவு காத்த கிளி போல அல்லாமல்
பறந்து போன பஞ்சாகியது
சூழல் புதிதானது
நீயும் புதிதானாய்
பிறிதொரு நாள்
உன்னுள் நானும் என்னுள் நீயுமாய்
உறைந்து கிடக்கிற பொழுது
நன்றியுள்ள ஜீவனுக்குச் சிறுவயதில்
நான் வீசிய கல் போல
எனக்கே திரும்பியது
உன் மறுமுனையில் நான் என்றானபிறகு
நமக்கிடையில் யாரோ
நடந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள்
இந்த முறை
இலவு காத்த கிளியோ
விலை கூறப் போகிற வெங்காயமோ?
Monday 17 March, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment